News October 31, 2025

பிஹாரிகளை தமிழக மண் காப்பாற்றுகிறது: RS பாரதி

image

பிஹார் மக்களை தமிழக மண் காப்பாற்றுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சொந்த மாநிலத்திலேயே ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் பிஹார் மக்கள் ஏன் தமிழகத்திற்கு வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகம் வளமாக இருப்பதால் தான் பிஹார் மக்கள், இங்கே வருவதாகவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.

Similar News

News November 1, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 1, 2025

PM-ன் பேச்சை பொருட்படுத்த கூடாது: எஸ்.வி.சேகர்

image

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

News November 1, 2025

உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

image

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!