News November 14, 2025

பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

image

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?

Similar News

News November 14, 2025

இந்த தம்பியை பார்த்தால் தன்னம்பிக்கை தானா வரும்..

image

பனியில் உறைந்த தலைமுடி, புருவத்துடன், கன்னங்கள் சிவந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுக்கு சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்துள்ளான். என்ன இது? என ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்க, -9° செல்சியஸில் 5 கிமீ., நடந்தே பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. எவ்வளவு தடைகள் வந்தாலும், தனது இலக்கை அடைய வழிவகுக்கும் கல்விக்காக சீனாவைச் சேர்ந்த இச்சிறுவனின் பயணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. படிப்பு முக்கியம் சிதம்பரம்!

News November 14, 2025

இரண்டாக உடையுமா இந்தியா?

image

திபெத் பீடபூமியில் சமீபமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதை ஆராய்ந்த போது, இமயமலையின் கீழே இந்தியா இரண்டாக உடைந்து வருகிறது என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய புவித்தட்டின் (tectonic plate) மேல்பகுதி வடக்கே நகர்ந்து வரும் நிலையில், கீழ்ப்பகுதி உடைந்து பூமிக்குள் மூழ்கி வருகிறது. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருபகுதி தனியே பிரிந்து, தீவாக கூட மாற வாய்ப்புண்டாம்.

News November 14, 2025

பிஹாரை கைப்பற்றிய மோடி அலை

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 204 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அலை என்று கூறப்படுகிறது. மோடி எங்கெல்லாம் ரோடு ஷோ நடத்தினாரோ, எங்கெல்லாம் பேசினாரோ அங்கெல்லாம் பாஜக முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மோடி அலை எடுபடுமா?

error: Content is protected !!