News January 23, 2026
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைத்த திமுக அரசு: நயினார்

கோவையில், <<18923923>>கல்லூரி மாணவியை சக மாணவர்<<>> கத்தியால் குத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், திமுகவின் ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட கொடூர கொலைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக வாரிசுகளை வன்முறையில் வசப்படுத்தி, அவர்களது வாழ்வை திமுக அரசு சிதைத்துவிட்டதாகவும் நயினார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Similar News
News March 23, 2026
சாத்தான்குளம் வழக்கில் நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் இவை: *ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. *நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளனர். *இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு கம்பு, கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
News March 23, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது.. இதுவே முதல்முறை

<<19457456>>ட்ரம்ப் போர் நிறுத்தம்<<>> அறிவித்ததன் எதிரொலியாக, வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 3 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காலை, மாலை சேர்த்து மொத்தமாக 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹7,600 குறைந்திருந்தது. ஆனால், தற்போது சவரனுக்கு ₹5,360 உயர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. SHARE IT
News March 23, 2026
234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?


