News March 4, 2025
பிளஸ் 2 பொதுத்தேர்வு- சேலத்தில் 280 பேர் ஆப்சென்ட்

சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வை 37,095 மாணவ, மாணவிகள் எழுதினர். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 300 பறக்கும் படை அலுவலர்கள், 3,100 அறை கண்காணிப்பாளர்கள், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News July 8, 2025
இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
News July 7, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
News July 7, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.