News March 4, 2025
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 524 பேர் ‘ஆப்சென்ட்’

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை தொடங்கிய நிலையில், 8,910 மாணவர்கள், 9,318 மாணவியர் என மொத்தம் 18,228 பேர் தேர்வெழுதினர். 273 மாணவர்கள், 251 மாணவிகள் என 524 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 90 ஆண்கள், 94 பெண்கள் என 184 பேர் நேற்று தேர்வெழுதினர். 30 பேர் தேர்வுக்கு வரவில்லை.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி, நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் செப்டம்பர் 15 அன்று ‘தமிழோடு விளையாடு’ போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். மாணவர்களைப் பங்கேற்கத் தயார் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (13.9.2025 ) 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-2
மேலும் விவரங்கள் அறிய & விண்ணப்பிக்க <