News April 24, 2025

பில்லி, சூனியம் நீக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

image

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது. கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இங்கு உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

Similar News

News December 11, 2025

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (டிச.11) நடத்தப்பட்ட சோதனையில் 20 மது பாட்டில்கள் 25 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 11, 2025

வேலூர்: ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது. சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம்,கலை, அறிவியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் httpsawards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த விருதை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!