News March 27, 2024
பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர்

வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், மகன் அஜித்குமார்(25). பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக, 2023 அக்டோபரில் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, இவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
ஓமலூர்: வாட்டர் ஹீட்டரால் பெண் பலி!

ஓமலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி கோமதி (41). குடும்பத்துடன் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில் கோமதி சுடு நீர் வைக்க வாட்டர் ஹீட்டர் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட கோமதியை, மகன்கள் சேலம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரிய வந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் (நவம்பர் 7) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் 2) சித்தூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் சித்தூர் 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ஆத்தூர் 4) வனவாசி முருகேச முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை. 5) தலைவாசல் கவர்பனை நியாய விலை கடை அருகில் 6) தாரமங்கலம் மானாத்தாள் தாண்டனூர் வறுமை ஒழிப்பு கட்டிட வளாகம்.
News November 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


