News March 8, 2026

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர்

image

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகங்களில் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.

Similar News

News April 4, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

image

விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூரை சேர்ந்தவர் முருகவேல்(27). இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 4, 2026

கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!