News November 15, 2024

பிறக்கும் குழந்தையை எதுவும் செய்து விடாதீர்கள்: தஞ்சை ஆட்சியர் உருக்கம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குழந்தையை வளர்க்க விரும்பாதவர்கள் தயவுசெய்து குழந்தையை ஏதும் செய்து விட வேண்டாம். அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை கூறுங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிலில் போடப்படும் குழந்தையை வளர்த்து அரசு காப்பகத்தில் பராமரிக்கப்படும்.

Similar News

News March 2, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்.01) இரவு 10 முதல் இன்று (மார்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 1, 2026

தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

தஞ்சை பெரிய கோயில் நடை மூடல்

image

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!