News January 24, 2025
பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News January 27, 2026
பெரம்பலூர் மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
தாலுகா – 4
1. பெரம்பலூர்
2. வேப்பந்தட்டை
3. குன்னம்
4. ஆலத்தூர்
சட்டமன்ற தொகுதிகள் – 2
1. பெரம்பலூர் (தனி)
2. குன்னம்
நகராட்சி – 1
1. பெரம்பலூர்
பேரூராட்சிகள் – 4
1. அரும்பாவூர்
2. குரும்பலூர்
3. இலப்பைக்குடிகாடு
4. பூலாம்பாடி
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 27, 2026
பெரம்பலூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
பெரம்பலூர் ஆட்சியருக்கு ஆளுநர் ரவி பாராட்டு

முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து சென்னை ராஜ்பவனில் நேற்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.


