News January 25, 2026
பிரபலம் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்

பத்ம பூஷண் விருது வென்ற மூத்த பத்திரிகையாளர் <<18955198>>மார்க் டல்லி<<>> மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை துறையின் முக்கிய குரலாக ஒலித்த டல்லி மறைவால் வருத்தமுற்று இருப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவரது படைப்புகளில் பிரதிபலித்ததாக குறிப்பிட்ட மோடி, டல்லியின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
படுக்கைக்கு அழைப்பு.. பிரபல நடிகை பரபரப்பு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சிலரால் சினிமாவின் தரம் கெடுவதாக நடிகை எஸ்தர் நோரானா கூறியுள்ளார். இந்த தலைமுறையினர் சினிமாவில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவர், முன்பு அப்படி இல்லை என்றார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் தவறானவர்கள் என்றால், அதற்கு உடன்படுவோரும் தவறானவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இவர் தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
News February 12, 2026
புயல் சின்னம்.. இங்கெல்லாம் கனமழை பொளக்கும்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்.15-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை (பிப்.13) தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி & குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், காலையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News February 12, 2026
பிப்.14 முட்டாள்கள் தினமாக மாறும்: மிருணாள் தாக்கூர்

தனுஷ் – மிருணாள் இருவரும் வரும் பிப்.14 அன்று திருமணம் செய்துகொள்ள போவதாக சில நாள்களுக்கு முன்பு வதந்தி பரவியது. அதை மிருணாள் ஏற்கெனவே மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த பேச்சை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது என்னை அச்சுறுத்தும் விசயமாக மாறிவிட்டது என்றும், வதந்தி பரப்பியவர்களுக்கு பிப்.14 என்பது ஏப்.1-ம் தேதியாக (முட்டாள்கள் தினம்) மாறும் எனவும் மிருணாள் தெரிவித்துள்ளார்.


