News August 18, 2025
பிரபஞ்சம் மனிதர்களுக்கானது இல்லை: இயக்குநர் வசந்த்

டெல்லியில் தெருநாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் ஒப்படைக்க SC உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து சென்னையில் நடந்த பேரணியில், ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், பிரபஞ்சம் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை என்றும், அனைத்து உயிர்களுக்கும் சமமானது என்றார். தெருநாய்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது அனைத்திற்கும் தீர்வல்ல என்றார்.
Similar News
News March 9, 2026
இன்ஸ்டாவில் தோனி – கம்பீரின் FUN CHAT!

T20I WC வெற்றியைத் தொடர்ந்து Ex கேப்டன் தோனிக்கும், கோச் கம்பீருக்கும் இடையே நடைபெற்ற இன்ஸ்டா உரையாடல் வைரலாகி வருகிறது. டீமை பாராட்டிய தோனி, ‘கோச் சாப்… உங்க முகத்தில் இருக்கும் புன்னகை அழகாக உள்ளது. சீரியஸ்னஸ் உடன் சிரிப்பு சேர்ந்தால் அது ‘கில்லர் காம்போ’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கம்பீர், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
News March 9, 2026
₹30 லட்சம் கோடி காலி.. கலங்கும் முதலீட்டாளர்கள்!

வாரத்தின் முதலில் நாளிலேயே பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,271 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சுமார் ₹30 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. போர் பதற்றம், சர்வதேச சந்தைகளின் சரிவு உள்ளிட்டவை சரிவுக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக IndiGo பங்குகள் 8% அளவுக்கு சரிவை சந்தித்தது.
News March 9, 2026
ராஜ்யசபாவுக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். திமுகவில் இருந்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிகவின் சுதீஷ் ஆகியோர் ராஜ்யசபா MP-க்களாக தேர்வாகியுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தம்பிதுரை, பாமகவின் அன்புமணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.


