News May 15, 2024
பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளில் நீரும் அதிகரித்து வெளியேற்றப்படுகின்றது . அந்த வகையில் பாபநாசம் அணையில் இன்று (மே 15) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையில் 245 கன அடி தண்ணீரும் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது.
Similar News
News September 16, 2025
நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️ காலியிடங்கள்: 368 ▶️ வயது வரம்பு: 20 – 33 ▶️ கல்வி தகுதி: Any Degree ▶️ பணிகள்: Station Controller ▶️ சம்பளம்: ரூ.35,400 ▶️ பணியிடம்: தமிழ்நாடு ▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025 ▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க <
News September 16, 2025
கவின் ஆணவ கொலை வழக்கு…. முக்கிய விசாரணை

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட எஸ்ஐ சரவணன், அவரது மகன் சுர்ஜித், உறவினர் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சரவணனின் ஜாமீன் மனு நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமா, விசாரணையை இன்று (செப் 16) ஒத்திவைத்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஜாமீன் முடிவு எடுக்கப்படும்.
News September 16, 2025
நெல்லை: கழுத்து அறுத்துக் கொல்லபட்ட ஆடு

பணகுடி அருகே தண்டையார் குலத்தை சேர்ந்தவர் உள்ள முடையார் (44). இவரது ஆடுகள் வேப்பிலங்குளத்தை சேர்ந்த சகாயம் என்பவரது தோட்டத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரு ஆடு கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது. இதற்கு சகாயம் தம்பதிகள் காரணமாக இருக்கலாம் என உள்ள முடையார் அளித்த புகாரின் படி பணகுடி போலீசார் சகாயம் தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.