News October 24, 2025

பிரதம மந்திரி கல்வி உதவி கால அவகாசம் நீட்டிப்பு

image

திண்டுக்கல்: பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப அவகாசம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை தாண்டக்கூடாது. கடந்தாண்டு பயனடைந்தவர்கள் விண்ணப்பத்தை https://scholarships.gov.in இணையதளத்தில்
புதுப்பிக்கலாம்.

Similar News

News October 25, 2025

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

திண்டுக்கல்: பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் துவக்கம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (24.10.2025) மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பயிர் காப்பீடு திட்ட பிரச்சார வாகனத்தை SBI General Insurance மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இணை இயக்குநர் அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் நாகேந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News October 24, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் புகார் குழு கட்டாயம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் & தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்-2013 படி உள்ளக புகார் குழு அமைத்து, விவரங்களை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றி, மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!