News March 19, 2025
பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்ட பதிவு நீட்டிப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ் மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை பதியலாம்.
Similar News
News March 19, 2025
5 தலைமுறை கண்ட மூதாட்டி மரணம்

பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.
News March 19, 2025
செல்வமகள் சேமிப்பு திட்டம்: திருப்பூர் 2ம் இடம்

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2வது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)
News March 19, 2025
கிராம சபை கூட்டம் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருகின்ற 23ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால், மார்ச் 23ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ஆம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.