News April 4, 2025

பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2025

புதுவை இஷ்ரம் வலைத்தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

image

புதுச்சேரியில் பணிபுரியும் அமைப்புச்சார் தொழிலாளர்கள் இஷ்ரம் ‘register.eshram.gov.in’ வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக,அரசின் தொழிலாளர் துறை சிறப்பு முகாம்களை அமைத்து இஷ்ரம் பதிவை இலவசமாக செய்து வருகிறது,அனைத்து பொது சேவை மையங்கள், அமைப்புச்சார் தொழிலாளர் நலச் சங்கங்கள் பல்வேறு இடங்களில் வரும் 17ஆம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News April 11, 2025

புதுச்சேரியில் மீன் பிடிக்க தடை

image

புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தும் வகையில் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி என 61 நாட்களுக்கு புதுவை மற்றும் காரைக்காலில் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்படுகிறது.

News April 11, 2025

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளி காவலர் பலி

image

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பிரசாந்த் என்பவர் ஹோம் கார்ட் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று இரவு உரிய அனுமதியின்றி காவலர் பள்ளியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி – விழுப்புரம் சாலை எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!