News April 2, 2025
பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
மதுரை: வாக்காளர்களே இந்த எண்கள் உங்களுக்குத்தான்.!

மதுரை மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) தொடர்பான உதவி எண்கள் நேற்று (நவ.05) வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பிற விவரங்களுக்கு பொதுமக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம். பொதுமக்களின் வசதிக்காக தனிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 5, 2025
பள்ளி மாணவி சுருண்டு விழுந்து பலி

மதுரை அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் ஆஷிகா(14). இவர்
செக்கானூரணி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 5, 2025
மதுரையில் நாளை மின்தடை அறிவிப்பு

மதுரை பைக்காரா, பசுமலை பகுதியில் நாளை (நவ.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பழங்காநத்தம், அக்ரஹாரம், பசும்பொன் நகர், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெரு வரை மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வைநகர், தேவி நகர், கிருஷ்ணாநகர், காயத்ரிதெரு, துரைசாமிநகர், கோவலன்நகர், அழகப்பன்நகர், திருவள்ளுவர்நகர், பிபிகே ரோடு, முத்துப்பட்டி, பைக்காரா, பசுமலை பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


