News April 5, 2025
பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை 4000 போலீசார் பாதுகாப்பு

பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
Similar News
News April 4, 2025
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராம்நாடு 08 மில்லி மீட்டர், மண்டபம் 14 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 25.10 மில்லி மீட்டர், பாம்பன் 20.60 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 83.20 மில்லி மீட்டர், திருவாடானை 21.20 மில்லி மீட்டர், தொண்டி 2.60 மில்லி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 40.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News April 4, 2025
ராமநாதபுரம் மக்களே தயாரா… சென்னைக்கு புதிய ரயில்

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்குகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு ரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-ராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இன்று இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மக்களே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
News April 4, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL