News March 24, 2026

‘பிரதமர் மோடியை கொல்வேன்’ வெடிகுண்டு மிரட்டல்

image

PM மோடியை வெடிகுண்டு வீசி கொலை செய்வேன் எனக் கூறி அடையாளம் தெரியாத நபர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இ-மெயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இ-மெயில் அனுப்பியது யார்?, எங்கிருந்து வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 7, 2026

ராகுல் ஸ்டாலினுக்கு இடையே புகைச்சலா?

image

சீட் ஷேரிங் விவகாரத்தில் இருந்தே திமுக – காங்., இடையே ஒரு சைலண்ட் war நடப்பதாக பேசப்படுகிறது. அதற்கு தோதாக புதுவையில் ஸ்டாலினும் ராகுலும் காலை, மாலை என தனித்தனியே பிரசாரம் செய்திருக்கின்றனர். அத்துடன், TN-ல் பிரசாரம் செய்ய ராகுல் தேதி ஒதுக்கவில்லை எனவும் பேசப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே புகைச்சலா எனவும், இதனால் TN-ல் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்வார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

News April 7, 2026

உழைத்தவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா தமிழிசை?

image

உழைத்தவர்களுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடுவதாக பாஜகவினர் சிலர் விமர்சித்தது குறித்து தமிழிசை பதிலளித்துள்ளார். அவர்களின் ஆதங்கம் புரிகிறது என்ற அவர், ஆனால் தன்னுடைய டாக்டர் பணியை துறந்து, பாஜகவுக்காக 27 ஆண்டுகள் உழைத்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தலைமை தனக்கு உரிய பதவிகளை வழங்கியது எனவும், தான் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News April 7, 2026

துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

image

பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!