News May 30, 2024
பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வந்த 2 பேர் கைது

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட வந்த நந்தினியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு தக்கலைக்கு அழைத்து சென்றுள்ளனர். கன்னியாகுமரியில் இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
Similar News
News April 20, 2025
கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News April 20, 2025
இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க
News April 20, 2025
கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00
2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00
3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00
4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30
5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30
*ஷேர் பண்ணுங்க