News August 1, 2024
பிரதமரின் பயிர் காப்பீடு பதிவுக்கு 1 நாள் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்பீடு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்
Similar News
News February 5, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு விற்பனைக்கூடத்திலும், பாசிப்பயிறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விற்பனைக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு நகல்களுடன் விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
News February 5, 2026
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (பிப். 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


