News April 9, 2025
பிஎம் இன்டர்ன்ஷிப் பயிற்சி: ரூ.5,000 உதவித்தொகை

பிஎம் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச்.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஏப்.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10, 12, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ முடித்த இளைஞர்கள் பயன்பெறலாம். இதில் தேர்வாவோருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் (அ) 9566531310 எண்ணை அழைக்கலாம்.
Similar News
News April 17, 2025
கோவை; பகிரங்க அழைப்பு விடுத்த பெண் புரோக்கர் சிக்கினார்!

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்து இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
News April 17, 2025
கொல்லம் பெங்களூரு சிறப்பு ரயில். தெற்கு ரயில்வே

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற நோக்கத்தில் தெற்கு ரயில்வே கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கொல்லத்திலிருந்து 20- தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, ரயில் ஏப்ரல் 21-ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும் என ரயில்வே வாரியம் சார்பாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
கோவை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

▶️கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 ▶️மாவட்ட ஆட்சியர் 0422-2301114 ▶️மாநகர காவல் ஆணையர் 0422-2300250 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0422-2300600 ▶️விபத்து அவசர வாகன உதவி 102▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098▶️பெண்கள் உதவி எண் 181▶️முதியோர்கள் உதவி எண் 14567▶️பேரிடர் கால உதவி 1077▶️சைபர் க்ரைம் உதவி எண்1930 ▶️ இரத்த வங்கி சேவை 1910, மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.