News February 13, 2025

பால் குடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு 8 மாத குழந்தை பலி

image

மதுரை அருகே கீழமாத்துரை சேர்ந்தவர்கள் வினோத் – வேல் முருகாயினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு உயிரிழந்தது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 21, 2025

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

image

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 21, 2025

மதுரையில் விஜய் போட்டியா..?

image

மதுரையில் தவெகாவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வௌியிட போகிறேன் என கூறிய விஜய், மதுரை கிழக்கு என ஆரம்பித்து மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.

News August 21, 2025

தரை விரிப்பை கூடாரமாக மாற்றிய த.வெ.க.,வினர்

image

மதுரை தவெக 2-வது மாநில மாநாடு நடை பெறும் பாரபத்தியில் மாநாட்டு திடலில் நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் காலை முதல் மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தரை விரிப்புகளை கூடாரம் போன்று அமைந்து நிழல் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!