News April 3, 2024
பாலூர் – கண்டிகை சாலையில் நேரக் கட்டுப்பாடு

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி ரயில்வே கேட் அருகில் கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி காலை 8 – 10, மாலை 4 – 5.30 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்
Similar News
News February 17, 2026
செங்கை புத்தக திருவிழா 20 ஆம் தேதி துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 7 – வது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, மறைமலை நகர் நகராட்சி சமூக நலக்கூடத்தில் 20 முதல் 26 தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைக்க உள்ளார்.
News February 17, 2026
செங்கை: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, ஓட்டுநர் மட்டுமின்றி உடன் வரும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளில் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News February 17, 2026
செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


