News November 6, 2025
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் சுத்திகரிக்க முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.
Similar News
News January 26, 2026
10 ஆண்டுகளாக வன்கொடுமை.. நடிகர் கைது

வீட்டில் வேலை செய்த பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலிவுட் நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டாலும், திருமணம் செய்து கொள்வார் என நம்பிக்கையில், இதுகுறித்து பொதுவெளியில் பேசவில்லை என அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நதீம் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
70% வரி குறைப்பு.. கார்கள் விலை குறைகிறது

இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை கார்கள் மீதான வரி 110%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்படவுள்ளது. ₹16 லட்சத்துக்கு மேல் இறக்குமதி விலை உள்ள கார்களுக்கு இது பொருந்தும். இதனால் பென்ஸ், BMW உள்ளிட்ட கார்களின் விலை இந்தியாவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 26, 2026
இந்திய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

காயம் காரணமாக NZ T20I தொடரில் இருந்து விலகிய, திலக் வர்மா 5-வது T20I-க்குள் முழு உடற்தகுதி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதனால், அவர் வரும் பிப்ரவரி 4-ம் தேதி, SA-க்கு WC T20I பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. T20-ல் அசுர பலத்துடன் உள்ள அணிக்கு, திலக் வர்மாவின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்க செய்யும்.


