News May 28, 2024

பாலியல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை

image

சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஞ்சுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று குற்றவாளி கார்த்திக்கிற்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Similar News

News January 29, 2026

திண்டுக்கல் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை

image

திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திற்கு 2 கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதி அமர்வு மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

News January 29, 2026

திண்டுக்கல்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

திண்டுக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

கொடைக்கானல் அருகே விபத்து:5 பேர் காயம்

image

மதுரையைச் சேர்ந்த 5 நண்பர்கள், கொடையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் காரில் வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் அதே காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

error: Content is protected !!