News December 7, 2024
பாலியல் வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை, கடந்த 2020ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த விஸ்வநாதன்(21) என்பவரை கள்ளிமந்தயம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று போக்சோ நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,05,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
Similar News
News March 4, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாத லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை செயலிகள் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளை அணுகி பாதுகாப்பாக கடன் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 3, 2026
திண்டுக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


