News December 29, 2024
பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

ஐடி கம்பெனியில் பணியாற்றிய பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சி பாசறை பிரிவில் நிர்வாகியாக இருக்கும் சக்திவேலை கிண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். கடனாக பணத்தை கொடுத்து பின்னர் பணம் குறிப்பிட்ட நேரத்தில் தரவில்லை என்றால் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
FLASH: சென்னையில் குடிநீர் வராது!

போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் கசிவு சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால், மார்ச்.7, 8ம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். நீரை சேமித்து வையுங்கள் மக்களே. அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
சென்னை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

சென்னை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
அறிவித்தார் சென்னை ஆட்சியர்

வில்லிவாக்கத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வண்ண மீன், மற்றும் உபகரணங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள கூட்டரங்கில், வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி, நாளை (மார்ச்.7) காலை 10முதல் மதியம் 3வரை நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


