News August 19, 2025
பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியிடம் விசாரணை

நெல்லை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் கடந்த மாதம் களக்காடு யூனியன் அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்கு சென்றபோது பட்டதாரி இளம் பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நாங்குநேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் துறை ரீதியான விசாரணை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழுவினர் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.
Similar News
News November 12, 2025
நெல்லையில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடல்

நெல்லை அருகே கைலாசபுரம் – கீழக்கோட்டை வழித்தட ரயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.12) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. இந்த கேட் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் இயக்க போலீசாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே நெல்லை சீனியர் செக்சன் இன்ஜினியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


