News April 15, 2025
பாலியல் தொல்லை; கிருஷ்ணகிரி இளைஞர் கேரளாவில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் டேனியல்(29). பெங்களூரில் தனியார் கார் ஷேரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரண்டு இளம் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக நிலையில், கேராளாவில் பதுங்கியிருந்த சந்தோஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 16, 2025
கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்

சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 16, 2025
தீராத நோய்கள் தீர்க்கும் வள்ளி குளம்

காவேரிப்பட்டினம் சுண்டக்காய்பட்டி கிராமத்தில் கந்தர்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த மலையில் உள்ள குகையில் சூரிய ஒளி படாத வள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தின் நீரை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. வள்ளிக்கு விக்கல் ஏற்பட்ட போது சூரிய ஒளி படாத குளத்தின் நீரை பருகினால் விக்கல் தீரும் என முருகன் கூற வள்ளி இங்கு வந்து நீரை பருகியதாக கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க