News April 26, 2024

பாலக்கோடு அருகே ஆலமரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்!

image

பாலக்கோடு வட்டம், ஓசூர் நெடுஞ்சாலை சூடப்பட்டி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆலமரத்தில் மர்ம நபர்கள் நேற்று(ஏப்.25) தீ வைத்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு குழாய் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

Similar News

News August 10, 2025

தருமபுரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புதிய வழிகளை அறிவித்துள்ளார். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94981 10581 மற்றும் 63690 28922 ஆகிய வாட்ஸ்அப் எண்கள், மற்றும் ‘DRUG FREE TN’ என்ற மொபைல் செயலி மூலம் எந்த புகார்களை அளிக்கலாம். புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் 23.380 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், கஞ்சா தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93.432 கிலோ கஞ்சா, ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 23.380 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 10, 2025

இந்தியாவில் காசிக்கு அடுத்து தருமபுரியில் தான்!

image

தருமபுரி, அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இந்தியாவில் காசிக்கு அடுத்து, தென் இந்தியாவில் காலபைரவருக்கென்று அமைந்துள்ள ஒரே தனிக்கோயில் இதுதான். அதியமான் மன்னன் போருக்குச் செல்லும் முன் தன் வாளை வைத்து இங்கு வழிபட்டதால், இன்றும் பைரவரின் திருக்கரங்களில் திரிசூலத்துடன் சேர்ந்து வாளும் இருப்பதைக் காணலாம். எதிரிகளின் தொல்லைகள் நீங்க, தடைகள் விலக இங்கே வழிபடலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!