News November 26, 2024

பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு 

image

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (நவ.27) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலை., இளநிலை, முதுநிலை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுக்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இத்தகவலை கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அறியும் வண்ணம் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடுமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 15, 2025

திருவாரூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17-ம் தேதிக்குள்ளாக விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 15, 2025

திருவாரூர்: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

image

கொரடாச்சேரி போலீஸ் சரகம் மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (53). இவரது மகன் பூவரசன் (22) திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான மலையூருக்கு வந்த பூவரசன் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கைலாசம் கண்டித்து வேலைக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பூவரசன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News September 15, 2025

திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!