News July 15, 2024

பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பனில் இருந்து கடந்த 1 ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 நாட்டு படகுகள், 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 25 மீனவர்களின் காவலை ஜீலை.29 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி விபத்து

image

பரமக்குடி அருகே கமுதக்குடி என்ற இடத்தில் மதுரை 4 வழிச்சாலையில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரத்தை வெங்காளூரை சேர்ந்த ஓட்டுநர் விஜயகுமார் ஊரக்குடிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கருவேலம் மரங்களை அரைக்கும் இயந்திரம் முற்றிலும் சேதமானது.

News September 11, 2025

ராமநாதபுரம்: இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்

image

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.SHARE பண்ணுங்க.

News September 11, 2025

தவில் நாதஸ்வரம் பயிற்சிப்பள்ளி சேர்க்கை

image

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.

error: Content is protected !!