News May 24, 2024

பாம்பனில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டை துறைமுக அதிகாரிகள் இன்று ஏற்றி உள்ளனர். இதனை அடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News

News March 4, 2026

முதுகுளத்தூர்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.03) இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், முதுவை பாரூக் விருப்பமனுவை வழங்கினர்.

News March 4, 2026

இராமநாதபுரம்: தெரு நாய்கள் கடித்து பலியான 20 உயிர்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் தனது சொந்த ஊரில் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். அவ்வாறு வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளை நேற்று (மார்ச்.03) தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

News March 4, 2026

இராம்நாடு மக்களுக்கு அரசு சார்பில் அருமையான வேலை!

image

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக மாவட்ட வனத்துறையின் சார்பில் பயணிகள் பேருந்து இயக்கம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக (தற்காலிக பணி) மாதம் ரூ.18,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் அலுவலகத்தை அணுக வேண்டும். (இராமேஸ்வரம் தீவு பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை) *SHARE

error: Content is protected !!