News July 13, 2024
பாமக வேட்பாளர் டெபாசிட் பெற்றார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி டெபாசிட் பெற்றுள்ளார். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் 50,000+ வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதுவரை பதிவான வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்குகளை பாமக வேட்பாளர் பெற்றதால், அவர் டெபாசிட் பெற்றார்.
Similar News
News July 9, 2025
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி

விழுப்புரத்தில் சான்று பெற்ற விதை நெல் மானியத்துடன் (1கி ரூ.20 மானியம்) 147.40 மெட்ரி டன், தரச் சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குரூ.7.87 கோடி மானிய உதவி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? 2/2

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News July 9, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை 1/2

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், விழுப்புரத்தில் மட்டும் 31 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04146-226417) தொடர்பு கொள்ளவும். SHARE IT தொடர்ச்சி