News November 13, 2025
பாமக பிரச்னைக்கு இதுதான் தீர்வு: பாமக பாலு

G.K.மணி உள்ளிட்டோர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஜி.கே.மணியும், அருளும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பாமகவில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
திருச்சி: மரத்தில் மோதி மூளை சாவு

சேலத்தைச் சேர்ந்த ராஜா (51). இவர் கடந்த நவ.2-ம் தேதி டூவீலரில் சோபனாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொப்பம்பட்டி அருகே வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதி அவர் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச் சாவு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 13, 2025
அண்ணாமலை போல் நயினாருக்கும்.. சேகர்பாபு

தனது பதவிக்காலம் முடிய 2.5 ஆண்டுகள் இருக்கிறது, ஆனால் அவருக்கு (சேகர்பாபு) 2 மாதங்களே உள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் முடிந்ததும், அண்ணாமலைக்கு எப்படி பாஜகவினர் அரோகரா போட்டார்களோ, அதேபோல், 2026 தேர்தல் முடிந்ததும் நயினாரின் பதவியை பறிக்க டெல்லி பேக் செய்யும் என்று சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
News November 13, 2025
சாப்பிட்டு முடிச்சதும் இத கண்டிப்பா குடிங்க!

சாப்பிட்டு முடித்ததும் வெறும் தண்ணீரை குடிப்பதை விட, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம் *சீரக நீர் ஜீரணத்தை தூண்டுகிறது *வாயு தொல்லை, வயிறு உப்புசத்தை குறைக்கும் *சாப்பிட்ட பின் சீரக நீர் குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும் *உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் *வாயை புத்துணர்ச்சியோடு வைத்து கொள்ள உதவுகிறது.


