News April 22, 2024

பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை ஏ சி டி நகர் பகுதியில் வசித்து வந்தவர் போத்துராஜ், மனைவி கமலா தேவி (81). இவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் ஏற்பட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கமலாதேவி மகன் விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 4, 2026

கரூர் பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 4, 2026

கரூர்: செல்போன் இருக்கா? போலீசார் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்புள்ள 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97.33 லட்சம் மீட்கப்பட்டு கூடுதல் எஸ்.பி.பிரபாகரன் முன்னிலையில் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூர் மக்களே உங்கள் செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் <>இங்கே கிளிக்<<>> செய்து புகாரளிக்கலாம் உடனடியாக உங்கள் செல்பேன் மீட்கப்படும். இதனை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

கரூரில் புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி!

image

கரூர் மின்னம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் (35), திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் சிவகாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!