News April 18, 2024
பாதுகாப்பு பணியில் 2700 பேர் – எஸ்பி

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படைவீரர்கள் என மொத்தம் 2700 பேர் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவு படையினர், 16 விரைவு நடவடிக்கை குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 90 பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
ரூ.1853 கோடியில் பரமக்குடி – இராமநாதபுரம் 4 வழிச்சாலை

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை கடந்த 2015ல் ரூ.934 கோடியில் துவங்கி 2018 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கீ.மீ தூரம் நான்கு வழிச்சாலை யாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ.1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது அரியனேந்தல் பகுதியில் பணிகள் துவங்கியதுள்ளன.
News February 11, 2026
பரமக்குடியில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.
News February 11, 2026
இராம்நாடு: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <


