News October 4, 2024

பாதாள சாக்கடை இணைப்பு முகாம்-

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:திருச்சி வார்டு எண் 39,42,43ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு பாண்டியன் மஹால், காந்தி சாலை மெயின் ரோட்டில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுக்கொண்டார்

Similar News

News August 20, 2025

திருச்சி வரும் குடியரசு தலைவர்

image

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!