News November 17, 2024
பாடி மேம்பாலம் அருகே லாரி மோதி இருவர் பலி

பாடி, கொரட்டூர் அடுத்த அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பாபு (70) மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (43) இருவரும் தனித்தனியே தங்கள் இருசக்கர வாகனத்தில் பாடி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த ஆவின் பால் வினியோகம் செய்யும் மினி லாரி, இருவர் மீதும் பலமாக மோதியது. இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியதால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஓட்டுனர் மாயமானார்.
Similar News
News March 1, 2026
சென்னை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

சென்னை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
சென்னையில் விளம்பர பலகை

சென்னையில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கவும், ஏற்கெனவே அமைத்த விளம்பரங்களுக்கு உரிமம் பெற விதிமீறல்களைச் சரிப்படுத்தவும் வரும் மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2026
சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


