News December 14, 2025
பாடகர் ஜூபின் கொலை.. யார் யாருக்கு தொடர்பு?

பிரபல <<17769687>>பாடகர் ஜூபின் கார்க்<<>> கொலை வழக்கில் 4 பேர் மீது SIT குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது பாதுகாப்பு பிரிவில் இருந்த நந்தேஷ்வர் போரா, பிரபின் பைஷ்யா ஆகியோரும் அதில் இடம் பெற்றுள்ளனர். வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடித்த SIT அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அசாம் மாநில CM ஹிமந்தா பிஸ்வா சர்மா விரைவில் ஜூபின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
நாளைய தமிழகமே விஜய்தான்: KAS

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தமிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். அவர் (விஜய்) கை நீட்டும் நபர்கள்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
News December 18, 2025
₹1-க்கு 1 GB டேட்டா

இன்டர்நெட் சேவை இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இன்டர்நெட் வசதியை அதிகரிக்க, ‘<<18294065>>PM Wani<<>>’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தங்கள் சேவையில் இணையும் பயனர்களுக்கு ₹1-க்கு 1 GB Wi-Fi டேட்டா தருவதாக ‘டப்பா’ நெட்வொர்க் அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், 2025-ல் மட்டும் நாடு முழுவதும் 73,128 பொது Wi-Fi ஹாட்ஸ்பாட்களை அமைத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
News December 18, 2025
உக்ரைனுக்கு புடின் வார்னிங்!

அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் போர் தீவிரமடையும் என உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பை விரிவாக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனிடையே, USA, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், நேட்டோவில் சேரும் முடிவை கைவிட பரிசீலிப்போம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


