News November 10, 2024

பாக். சிறையில் வாடும் காசிமேடு மீனவர்களை மீட்க கோரிக்கை

image

காசிமேடு மீனவர்கள் 7 பேர் கடந்த 2023, டிசம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் பீ.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News September 11, 2025

சென்னையில் 12 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (11.09.2025) 12 இடங்களில் நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

சென்னைக்கு இடி, மின்னலுடன் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, சென்னைக்கு இன்று(செப்.11) இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.

News September 11, 2025

அடையாளமே மாறும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

image

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரலில் உள்ள இந்த பூங்கா ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!