News November 7, 2025
பவானி: பட்டப்பகலில் துணிகரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

பவானியில் பட்டப் பகலில் பைனான்ஸில் பூட்டை உடைத்து ரூ.55,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பைனான்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் படி, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் குப்பிபாலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்களை கைது செய்து, ரூ.55,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 25, 2026
கோபி அருகே விபத்து: ஒருவர் வலி!

கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக கோபியை அடுத்த சவுண்டப்பூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 24, 2026
ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஷேர் பண்ணுங்க)
News January 24, 2026
ஈரோடு: 12th, டிப்ளமோ போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <


