News August 23, 2025
பவானிசாகர் மீனவர்கள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக சேர்க்க கோரி மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News August 23, 2025
சத்தியமங்கலம் பகுதியை தனி மாவட்டமாக மாற்ற கோரிக்கை!

சத்தியமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம். புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அலுவலகத்தில் நாளை 24.8.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
ஈரோட்டில் அதிகளவில் மது குடித்தவர் உயிரிழப்பு

ஈரோடு முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60).சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் மதுபோதையில் மயங்கிக்கிடந்தார். இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News August 23, 2025
ஈரோடு: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணம் கேக்றாங்களா?

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.