News July 11, 2024

பவானிசாகர் அணை நாளை திறப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 2024-25 ஆண்டு முதல் போக பாசனத்திற்கு அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 54 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் ஜூலை 12ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

ஈரோடு : பவானி – சித்தோடு சாலை சீரமைப்பு

image

பவானி-சித்தோடு நெடுஞ்சாலையில் பஸ்கள்,கனரக லாரிகள்,நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதோடு, ஜல்லிகள் பரவலாக கிடந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், நேற்று முன்தினம் குண்டும் குழியுமான இடங்களில், கான்கிரீட் போட்டு சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர்.

News August 14, 2025

ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

image

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News August 14, 2025

ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

image

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!