News November 6, 2025

பழிவாங்குகிறதா பாம்பு? ஒரு மாதத்தில் 7 முறை கடி

image

தெலங்கானாவில் 28 வயதான இளைஞரை, ஒரு மாதத்தில் 7 முறை பாம்பு கடித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறை கடித்ததும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்த அந்நபர் வீட்டுக்கு திரும்பியதும், மீண்டும் மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதில் பீதியடைந்த அந்நபர், பாம்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணி புலம்பி வருகிறார். உண்மையில் சில வகை பாம்புகள் பழிவாங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 6, 2026

பிப்ரவரி 6: வரலாற்றில் இன்று

image

*1931 – சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு நாள்
*1945 – பாடகர் பாப் மார்லி பிறந்தநாள்
*1956 – கவிஞர் பிறைசூடன் பிறந்தநாள்
*1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் டைட்டன் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக சோதனை
*1983 – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பிறந்தநாள்
*2022 – பாடகி லதா மங்கேஷ்கர் நினைவு நாள்

News February 6, 2026

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

image

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

அமைச்சர் மீது கடும் கோபத்தில் CM ஸ்டாலின்

image

நேற்று CM ஸ்டாலின் பங்கேற்ற கைவினை கலைஞர்களுக்கான விருதுகள் விழாவிற்கு அமைச்சர் காந்தி வரவில்லை. அதிர்ச்சியடைந்த CM ஸ்டாலின், அமைச்சரிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகம் சென்ற அமைச்சர் காந்தியை CM ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாகவும், விளக்கம் சொல்ல முயன்றபோது வாயை மூடும்படி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சரின் முகம் வாடியதாம்.

error: Content is protected !!