News April 22, 2024

பழவேற்காட்டில் தீப்பற்றி எரிந்த மீனவர்களின் வலைகள்

image

பழவேற்காடு: கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News July 5, 2025

திருவள்ளூரில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் உயிரிழப்புகள்

image

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிகண்டன் (28) நேற்று (ஜூலை 4) தனது உறவினர் சந்தோஷ் (17) உடன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது, சர்ச் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மாணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் படுகாயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News July 5, 2025

திருவள்ளூர் உழவர் சந்தையின் விலை நிலவரம்

image

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 05) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.50, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.60, கத்திரிக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது

News July 5, 2025

திருவள்ளூரில் வீட்டு, நில பத்திரத்தில் பிரச்னையா ?

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (044-27661230) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

error: Content is protected !!