News April 25, 2024

பழமைவாய்ந்த கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

image

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில் கரூவூராருக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. சுயம்பு லிங்கமான பசுபதீஸ்வரருக்கு, பசு தானாக பால் சுரந்ததாக நம்பப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கோவில் திராவிடக் கட்டடக்கலையைக் கொண்டுள்ளது.

Similar News

News March 3, 2026

கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.

News March 3, 2026

கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

image

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .

News March 3, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 2) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உட்கோட்ட அலுவலரை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!