News May 28, 2024
பழனி மலை ரோப் கார் சேவை நிறுத்தம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள ரோப் கார் (கம்பி வடம் ) சேவை 30.05.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவித்துள்ளது. வழக்கம் போல இழுவை ரயில் சேவை தொடரும் எனவும், அன்று ஒரு நாள் அந்த சேவையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 9ஆம் தேதி இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
News September 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்று வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு (மழை வெள்ளம் போன்ற பாதிப்புக்கு கூட) காவல்துறையினரை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <