News January 13, 2026

பழனி சென்ற பெண் பக்தர் பலி!

image

திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனைத் தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

திண்டுக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)

News January 26, 2026

பழனி அருகே கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

image

பழனி பாலசமுத்திரம் பகுதியில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான ரங்கமலை அடிவாரத்தில் உள்ள செக்காடும் பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. போகர் ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் தமிழ்நாயகன் அளித்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் ஸ்ரீராஜா, மனோகரன் ஆய்வு மேற்கொண்டனர். இது பாலசமுத்திர பாளையக்காரர் பொறிப்பித்ததாக தெரிவித்தனர்.

News January 26, 2026

திண்டுக்கல்: Spam Calls தொல்லையா?

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!